மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

திருமணம் செய்யாமலே இணைந்து வாழும் முறைக்கு தடை விதிக்க கோரிக்கை!

லிவ்-இன்-டுகெதர் உறவு முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ தடை விதிக்க வேண்டும்..

News image
Updated On :28 ஜூலை 2024, 5:57 pm

திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் லிவ்-இன்-டுகெதர் முறையில் இணைந்து வாழும் முறையை தடை செய்ய ஹரியாணாவில் நடைபெற்ற 300 கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் இன்று(ஜூலை 28) ஹரியாணா மட்டுமன்றி, உத்தர பிரதேசம், குஜராத், தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிருந்து சுமார் 300 பஞ்சாயத்து ஒன்று திரண்டு முக்கிய விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், கூட்டத்துக்கு தலைமையேற்ற ரகுபிர் நைன் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாங்கள் யாரும் காதல் திருமணத்துக்கு எதிராக இல்லை. மாறாக, அதில் பெற்றோர்களின் சம்மதம் மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஒரே கோத்ரத்தை சார்ந்தவர்கள் (பாரம்பரியமாக ஒரே வம்சத்தை சார்ந்தவர்கள்) திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும். லிவ்-இன்-உறவு முறைகள், ஒரே பாலின திருமணங்கள் ஆகியவற்றுக்கும் கட்டாயம் தடை விதிக்க வேண்டும்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து விவாதிப்போம். எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து இவ்விவகாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்த உள்ளோம்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

லிவ்-இன்-உறவு முறைகளால் குடும்பங்கள் பிரிந்துவிடுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ள பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான சந்தோஷ் தாஹியா, சட்டம் இத்தகைய வாழ்வியல் முறைக்கு அனுமதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ”ஒரே வம்ச கோத்ரத்தில் திருமணம் செய்வதால் சமூக கட்டமைப்பு சிதைவதாகவும், இதன் காரணமாக, மரபணு சார் பிரச்னைகள் உள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரே கோத்ரத்தில் திருமணம் செய்வதை கட்டாயம் தடை செய்ய வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.