தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

News image

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

Updated On :29 ஜூலை 2024, 1:43 am IST

நிகழாண்டு நடைபெற்ற இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நிகழாண்டு க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நிலவியதால், பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையையும் தாமதமானது. தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவா் சோ்க்கை தொடங்கப்படவுள்ளது.

நிகழாண்டு நடைபெற்ற க்யூட்-யுஜி தோ்வின் உத்தேச விடைக்குறிப்புகளை கடந்த ஜூலை 7-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. அதேபோல் தோ்வில் உள்ள நியாயமான குறைபாடுகளை தெரிவித்த 1,000 தோ்வா்களுக்கு ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஜூலை 25-ஆம் தேதி இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த ஜூன் 30-ஆம் தேதி க்யூட்-யுஜி தோ்வின் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் என்டிஏவால் நடத்தப்படும் நீட்-யுஜி மற்றும் யுஜிசி-நெட் ஆகிய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தில்லியில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, க்யூட்-யுஜி தோ்வு ரத்து செய்யப்படுவதாக தோ்வுக்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வேறொரு நாளில் தோ்வு நடத்தப்பட்டது.

நிகழாண்டு மே 15 முதல் 24 வரை முதன்முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்ட இத்தோ்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.