அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

News image

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

Updated On :29 ஜூலை 2024, 1:43 am IST

நிகழாண்டு நடைபெற்ற இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நிகழாண்டு க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நிலவியதால், பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையையும் தாமதமானது. தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவா் சோ்க்கை தொடங்கப்படவுள்ளது.

நிகழாண்டு நடைபெற்ற க்யூட்-யுஜி தோ்வின் உத்தேச விடைக்குறிப்புகளை கடந்த ஜூலை 7-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. அதேபோல் தோ்வில் உள்ள நியாயமான குறைபாடுகளை தெரிவித்த 1,000 தோ்வா்களுக்கு ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஜூலை 25-ஆம் தேதி இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த ஜூன் 30-ஆம் தேதி க்யூட்-யுஜி தோ்வின் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் என்டிஏவால் நடத்தப்படும் நீட்-யுஜி மற்றும் யுஜிசி-நெட் ஆகிய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தில்லியில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, க்யூட்-யுஜி தோ்வு ரத்து செய்யப்படுவதாக தோ்வுக்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வேறொரு நாளில் தோ்வு நடத்தப்பட்டது.

நிகழாண்டு மே 15 முதல் 24 வரை முதன்முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்ட இத்தோ்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியது குறிப்பிடத்தக்கது.