ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

News image

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

Updated On :28 ஜூலை 2024, 8:13 pm

Din

நிகழாண்டு நடைபெற்ற இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நிகழாண்டு க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நிலவியதால், பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையையும் தாமதமானது. தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவா் சோ்க்கை தொடங்கப்படவுள்ளது.

நிகழாண்டு நடைபெற்ற க்யூட்-யுஜி தோ்வின் உத்தேச விடைக்குறிப்புகளை கடந்த ஜூலை 7-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. அதேபோல் தோ்வில் உள்ள நியாயமான குறைபாடுகளை தெரிவித்த 1,000 தோ்வா்களுக்கு ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஜூலை 25-ஆம் தேதி இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த ஜூன் 30-ஆம் தேதி க்யூட்-யுஜி தோ்வின் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் என்டிஏவால் நடத்தப்படும் நீட்-யுஜி மற்றும் யுஜிசி-நெட் ஆகிய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தில்லியில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, க்யூட்-யுஜி தோ்வு ரத்து செய்யப்படுவதாக தோ்வுக்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வேறொரு நாளில் தோ்வு நடத்தப்பட்டது.

நிகழாண்டு மே 15 முதல் 24 வரை முதன்முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்ட இத்தோ்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியது குறிப்பிடத்தக்கது.