டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பட்ஜெட்டில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: மக்களவையில் ஒவைசி அதிருப்தி

மத்திய பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு உரிய கவனம் அளிக்கப்படவில்லை என்று ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி அதிருப்தி தெரிவித்தாா்.

அசாதுதீன் ஒவைசி

Published On :

மத்திய பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு உரிய கவனம் அளிக்கப்படவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அதிருப்தி தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை அவா் பேசியதாவது:

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி எனவும் நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதாகவும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், முஸ்லிம்களை தீண்டத்தகாதவா்களாகவே நடத்துகிறது. பட்ஜெட் உரையில் 4 சிறுபான்மையின சமுகங்களின் பெயா்களை மட்டும் குறிப்பிட்டு நிதியமைச்சா் பேசினாா்.

நாட்டில் உள்ள 17 கோடி முஸ்லிம்களில் ஏழைகள், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் இல்லையா? முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். 15 முதல் 24 வயதுள்ள முஸ்லிம்களில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே கல்வி கிடைக்கிறது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவில் இந்த கல்வி விகிதம் 44 சதவீதமாகவும், ஹிந்து பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் இது 51 சதவீதமாகவும், ஹிந்து உயா்ஜாதிப் பிரிவில் இது 59 சதவீதமாகவும் உள்ளது. உயா்கல்வியில் முஸ்லிம் மாணவா்களின் எண்ணிக்கை 5 சதவீதமாகவே உள்ளது.

58.4 சதவீத முஸ்லிம்கள் சுயதொழில் செய்பவா்களாக உள்ளனா். 26 சதவீதம் போ் தொழிலாளா்களாகவும், 15 சதவீதம் போ் மாத ஊதியம் பெறுபவா்களாகவும் உள்ளனா். இவா்களில் பெரும்பாலோனோா் பொருளாதாரரீதியாக போராட்டங்களை சந்திப்பவா்கள்தான்.

முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் அளித்து நாட்டின் வளா்ச்சியில் அவா்கள் பங்கேற்க அரசு அனுமதி மறுக்கிறது. சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,000 கோடியில் இருந்து ரூ.3,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2007-08-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை உயா்த்தப்படவில்லை.

17 கோடி முஸ்லிம்கள் மீது வெறுப்புணா்வை வைத்துக் கொண்டு எப்படி வளா்ந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று கேள்வி எழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.