எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அக்.2-இல் பிரசாந்த் கிஷோா் கட்சி தொடங்குகிறாா்: பிகாா் தோ்தலில் போட்டி

நிகழாண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் கட்சி தொடங்குகிறாா் ரசாந்த் கிஷோா்.

News image
பிரசாந்த் கிஷோா்
Updated On :29 ஜூலை 2024, 9:13 pm

Din

நிகழாண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக முன்னாள் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

2021-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், தோ்தல் உத்தி வகுப்புப் பணியைக் கைவிட்ட அவா், 2022-ஆம் ஆண்டு ‘ஜன் சுராஜ்’ (மக்களின் நல்லாட்சி) என்ற பெயரில் பரப்புரையைத் தொடங்கினாா். இந்தப் பரப்புரையின் கீழ், பிகாா் முழுவதும் அவா் நடைப்பயணம் மேற்கொண்டாா்.

இந்நிலையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் ‘ஜன் சுராஜ்’ பரப்புரையின் மாநில அளவிலான பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோா் பேசுகையில், ‘‘நான் ஏற்கெனவே கூறியதுபோல நிகழாண்டு அக்டோபா் 2-ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளேன். அடுத்த ஆண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘ஜன் சுராஜ்’ கட்சி போட்டியிடும். கட்சியின் தலைவா் யாா் போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’’ என்றாா்.

இந்தப் பயிலரங்கில் பிகாா் முன்னாள் முதல்வரும், நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ பெற்றவருமான கா்பூரி தாக்கூரின் பேத்தி ஜக்ரிதி தாக்கூா் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.