ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வயநாடு சுற்றுலா சென்ற தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு!

வயநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்றவர்களுக்கு தமிழக அரசு உதவ எண்ணை அறிவித்துள்ளது.

News image
வயநாடு நிலச்சரிவு- pti
Updated On :30 ஜூலை 2024, 11:22 am

DIN

தமிழகத்தில் இருந்து சுற்றுலாச் சென்றவர்கள் தொடர்பாக தமிழக அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில் வயநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்றவர்களுக்கு தமிழக அரசு உதவ எண்ணை அறிவித்துள்ளது.

1070 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.