வட மாநிலங்களில் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஒடிஸாவில் 19 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16 பேரும், பிகாரில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், பஞ்சாபில் ஒருவரும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.
ஹரியாணா, சண்டீகர் - தில்லி, உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானின் சில பகுதிகளிலும், உத்தராகண்டின் சில பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை நிலவுவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தில்லியின் முங்கேஷ்பூரில் உள்ள தானியங்கி வானிலை நிலைய சென்சார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறால் அதிகபட்ச வெப்பநிலையை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
மே 29 அன்று முங்கேஷ்பூரில் வானிலை மைய சென்சாரில் அதிகபட்ச வெப்பநிலையான 52.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதைத்தவிர மற்ற சென்சாரில் 45.2 முதல் 49.1 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், சென்சார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்த வரைவு அறிக்கையில் உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த இரு நாள்கள் மழைக்கு வாய்ப்பு
சுட்டெரிக்கும் சூரியன்!

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


