வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி அரசில் உத்தவ் தாக்கரே இணைவார்: ரவி ராணா

News image
Updated On :3 ஜூன் 2024, 1:37 pm IST

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில் மோடி அரசில் உத்தவ் தாக்கரே இணைவார் என ரவி ராணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமராவதி எம்எல்ஏ ரவி ராணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி மீண்டும் பிரதமரான 15 நாட்களுக்குப் பிறகு, மோடி அரசில் உத்தவ் தாக்கரேவை காணலாம். ஏனென்றால் வரவிருக்கும் காலம் மோடியுடையது. உத்தவ் தாக்கரே அதை அறிவார்.

அமராவதி மக்களவைத் தொகுதியில் தனது மனைவி நவ்நீத் ராணா இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவருக்கு அதிக அளவில் வாக்களித்ததால் நவ்நீத் மீண்டும் எம்.பி.யாக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அமராவதியின் சிட்டிங் எம்.பி.யான ரவி ராணாவின் மனைவி நவ்நீத் ராணா, மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக அமராவதியில் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ பல்வந்த் வான்கடே மற்றும் பிரஹர் ஜனசக்தி கட்சியின் தினேஷ் பப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதே அமராவதி தொகுதியில் இருந்து நவ்நீத் ராணா சுயேச்சையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.