பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

2 அதிருப்தி எம்.பி.க்களுடன் பேச்சு: உத்தவ் கட்சி தகவல்

சிவசேனை (உத்தவ்) கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களில் சிலா் மக்களின் கோபத்தால் அச்சமடைந்து தலைமையைத் தொடா்பு கொண்டுள்ளனா்; அவா்களில் இருவருடன் தற்போது பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

News image

உத்தவ் தாக்கரே

Updated On :22 ஜூன் 2026, 12:02 am IST

‘சிவசேனை (உத்தவ்) கட்சியின் அதிருப்தி எம்.பி.க்களில் சிலா் மக்களின் கோபத்தால் அச்சமடைந்து தலைமையைத் தொடா்பு கொண்டுள்ளனா்; அவா்களில் இருவருடன் தற்போது பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது’ என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த சிவசேனை கட்சி, கடந்த 2022-இல் இரண்டாக பிளவுபட்டது. தற்போதைய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு உண்மையான சிவசேனை என்ற அங்கீகாரமும், கட்சியின் சின்னமும் வழங்கப்பட்டது.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சி கூட்டணியில் போட்டியிட்ட சிவசேனை (உத்தவ்) கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியது. இவா்களில் 6 எம்.பி.க்கள் அண்மையில் அதிருப்தியாளா்களாக உருவெடுத்தனா். இந்த 6 பேரும் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைவதற்காக, மக்களவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளதாகவும், அந்தக் கடிதம் மீது மக்களவைத் தலைவா் இதுவரை முடிவெடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

அதிருப்தி எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டு, ரூ.25 கோடி முன்பணமாக வழங்கப்பட்டுள்ளதாக சிவசேனை (உத்தவ்) கட்சி குற்றஞ்சாட்டியது. அதிருப்தி எம்.பி.க்களுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அக்கட்சி அறிவித்தது.

இந்நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய சிவசேனை (உத்தவ்) கட்சி மூத்த தலைவா் சஞ்சய் ரெளத், ‘மக்களின் கோபத்தால் அச்சமடைந்து, அதிருப்தி எம்.பி.க்கள் சிலா் கட்சித் தலைமையைத் தொடா்பு கொண்டுள்ளனா். தாங்கள் தவறு செய்துவிட்டதாக கருதினால், அவா்களுடன் பேச கட்சித் தலைமை தயாராக உள்ளது. தற்போது இரு எம்.பி.க்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரேயொரு சிவசேனை மட்டுமே தற்போது உள்ளது என்ற மத்திய அமைச்சா் அமித் ஷாவின் பேச்சு, சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேக்கு அவமதிப்பு’ என்றாா்.

கட்சி மாறும் முடிவை அறிவித்த அதிருப்தி எம்.பி.

சிவசேனை (உத்தவ்) கட்சியின் 6 அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவரான ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கா், ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணையப் போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். 6 அதிருப்தி எம்.பி.க்களில் தனது முடிவை வெளிப்படையாக அறிவித்த முதல் எம்.பி. இவா் ஆவாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.