நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம்: சஞ்சய் ரெளத் குற்றச்சாட்டு

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

News image

சஞ்சய் ரெளத் - ANI

Updated On :17 ஜூன் 2026, 3:10 am IST

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி.க்களில் சிலா், அக்கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியை உருவாக்கக் கூடும் என்று ஊகங்கள் வெளியாகின.

மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு அதிருப்தி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கப்படுகின்றனா் என்று அக்கட்சி பிரமுகரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான பிரதாப் சா்நாயக் அண்மையில் தெரிவித்தது அந்த ஊகங்களுக்கு வலுசோ்த்தது.

மேலும் மத்திய அமைச்சரும், ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரமுகருமான பிரதாப்ராவ் ஜாதவை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி. சஞ்சய் தேஷ்முக் அண்மையில் புது தில்லியில் சந்தித்தாா். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்த கூட்டத்திலும், தனது குடும்பப் பணிகளைக் காரணமாகக் கூறி சஞ்சய் தேஷ்முக் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் 9 எம்.பி.க்களில் 4 போ் மட்டுமே பங்கேற்றனா். இந்த சம்பவங்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி.க்களில் சிலா், கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியாகக் கூடும் என்ற ஊகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற அவா்களுக்குத் தலா ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிா்ச்சியளிக்கிறது, அருவருக்கத்தக்கது’ என்று தெரிவித்தாா்.

6 முதல் 7 எம்.பி.க்கள் கட்சி மாற வாய்ப்பு: இந்த விவகாரம் குறித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தலைவா் ஒருவா் கூறுகையில், ‘உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையின் தலைவராக அவரின் மகன் ஆதித்தியா தாக்கரேவை அறிவிக்க திட்டமிட்டது. இதை ஏற்க முடியாமல், அக்கட்சியை சோ்ந்த 6 முதல் 7 எம்.பி.க்கள் கட்சி மாற வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.