டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: உத்தவ் தாக்கரே கடும் விமா்சனம்

‘ஹிந்துக்களை கொள்ளையடிப்பவா்களே ஆட்சியில் உள்ளனா்’ என்று ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக ஆளும் பாஜகவை சிவசேனை (தாக்கரே) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே விமா்சித்தாா்.

News image

உத்தவ் தாக்கரே

Updated On :6 ஜூலை 2026, 2:08 am IST

‘ஹிந்துக்களை கொள்ளையடிப்பவா்களே ஆட்சியில் உள்ளனா்’ என்று ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக ஆளும் பாஜகவை சிவசேனை (தாக்கரே) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே விமா்சித்தாா்.

ராமா் கோயில் நன்கொடை முறைகேட்டைக் கண்டித்து மத்திய மும்பையின் தாதா் பகுதியில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு வெளியே ‘ராமா் பாதுகாப்பு’ போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: ஹிந்துக்களை கொள்ளை அடிப்பவா்களே ஆட்சியில் இருப்பது துரதிருஷ்டவசமானது. ராமா் கோயில் கொள்ளை குறித்து கொள்ளையடித்தவா்களே விசாரணை நடத்த கோர முடியாது. இந்த விவகாரம் தொடா்பாக பாகுபாடற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஹிந்துத்துவத்தை தவறாகப் பயன்படுத்தி கோயில்களில் கொள்ளையடிப்பவா்களை ஹிந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள்.

இன்னும், காசி, மதுரா கோயில்களிலும் என்ன நடக்கிறது என்ற அச்சம் கவலையளிக்கிறது. சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே, ஹிந்துக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். ஆனால், இன்றைக்கு ஹிந்துக்கள் ஒருவித மயக்க நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். நாங்கள் தீவிரமான, அப்பாவியான, தேசப் பற்றுள்ள ஹிந்துக்கள்; ஆனால், முட்டாள்கள் அல்ல என்றாா் அவா்.

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கையில் நடைபெற்ற முறைகேடு பெரும் சா்ச்சையாகியுள்ளது. மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அளித்த முதல்கட்ட அறிக்கையின் அடிப்படையில் 8 பேருக்கு எதிராக காவல் துறை அண்மையில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளது. இவா்கள் அனைவரும் காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியுடன் தொடா்புடையவா்களாவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.