திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

பொய்த்துப் போன வாக்கு கணிப்புகள்!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயுள்ளது.

கோப்புப் படம்.

Published On :5 ஜூன் 2024, 12:09 pm IST

புது தில்லி: மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயுள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு, தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்டன.

இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணிக்கு 353 முதல் 383 வரையிலான இடங்களும் இந்தியா கூட்டணிக்கு 152 முதல் 182 வரையிலான இடங்களும் கிடைக்கும் என்று ஏபிபி-சி வோட்டா் வாக்கு கணிப்பில் கூறப்பட்டது.

இதேபோல், ரிபப்ளிக் டிவி-பி மாா்க், ஜன் கி பாத், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ், நியூஷ் நேஷன், டுடேஸ் சாணக்யா, டைம்ஸ் நவ்-இடிஜி ரிசா்ச், நியூஸ் 18 ஆகிய நிறுவனங்கள்-முகமைகளின் வாக்கு கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 முதல் 400 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தனிப்பெரும்பான்மைக்கு தேவையான (272) இடங்களைவிட அதிக தொகுதிகளில் பாஜக வெல்லும் என்ற கூறப்பட்ட நிலையில், அக்கணிப்புகள் பொய்த்துவிட்டன.

கடந்த 2019 தோ்தலில் பாஜக 303 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஒட்டுமொத்தமாக 353 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 53, அதன் கூட்டணிக் கட்சிகள் 38 இடங்களைக் கைப்பற்றின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.