மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்னால் இடைத்தேர்தல்: முன்னிலையில் நயாப் சைனி!

கர்னால் தொகுதியில் முன்னிலையில் நயாப் சைனி.

News image
Updated On :4 ஜூன் 2024, 6:13 am

ஹரியாணா மாநிலத்தின் கர்னால் தொகுதியில் அந்த மாநில முதல்வர் நயாப் சிங் சைனி முன்னிலையில் உள்ளார்.

முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக குருக்ஷேத்ரா எம்பியான நயாப் சைனி கடந்த மார்ச் 12-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தலுடன், மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், கர்னால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி 13,668 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் போட்டியாளரான தர்லோச்சன் சிங்கை விட முன்னியில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.