புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்?

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2024, 7:35 am

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசக் கட்சி பேரவைத் தேர்தலின் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் ஆட்சியை அமைக்கவுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை மற்றும் பாஜகவும் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனை 20 தொகுதிகளிலும், பாஜக ஏழு பேரவைத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஒய்எஸ்ஆர்சிபி தொடர்ந்து பின்னடைவில் உள்ளது.

தேர்தல் ஆணையம் தெரிவித்ததாவது, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர்சிபி 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொகுதியில் 21,292 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். தெலுங்கு தேசக் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் 6832 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பீத்தாபுரம் தொகுதியில் ஜனசேனை கட்சித்தலைவர் பவன் கல்யாண் 22,818 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஒய்எஸ்ஆர்சிபி அமைச்சர்கள் ஆர்.கே.ரோஜா, போட்சா சத்தியநாராயணன், சி.கோபாலகிருஷ்ணா, எஸ்.அப்பலராஜு, அம்பதி ராம்பாபு, வி.ரஜினி, டி.வனிதா, அமர்நாத் மற்றும் அம்ஜத் பாஷா ஆகியோர் பின்னடைவில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.