

’தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் மட்டும் தான் கூட்டணி’ என்று செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தனிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ”நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம். இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு தான் செல்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியானது மோசமானதாக இருந்தது; அந்த வெறுப்பில் தான் மக்கள் தெலுங்கு தேசத்தினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” எனப் பேட்டியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.