புது தில்லி: உனது சகோதரியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சகோதரி பிரியங்கா கடிதம் எழுதியிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக உருக்கமான கடிதம் ஒன்றை ராகுலுக்கு பிரியங்கா எழுதியிருக்கிறார்.
அதில், மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கு எதிரான போராட்டம் என்றும், உண்மைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எதற்கும் துணிந்தவர் என்று ராகுலை புகழ்ந்திருக்கும் பிரியங்கா, தனது இதயத்தில் அன்பு, உண்மை, கனிவுடன் அவர் போராடியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், எப்போதும் போலவே நீ தைரியமாக இரு, மற்றவர்கள் என்ன சொன்னாலும், நீ இப்போது செய்வதையே தொடர வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் பின்வாங்கக் கூடாது, உண்மைக்கான போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடக்கூடாது. உன்னை கோபமும், விரக்தியும் ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது, ஒருவேளை பலரும் இதனையே உனக்கு பரிசாகக் கொடுத்தாலும் கூட, இதுவரை பார்க்காதவர்களும் உன்னை இனி பார்ப்பார்கள், நீ எதற்கும் துணிந்த வீரர் என்று பிரியங்கா தனது சகோதரர் ராகுலை புகழ்ந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றாா்.
ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி, 6,87,649 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் தினேஷ் பிரதாப் சிங் 2,97,619 வாக்குகளைப் பெற்றாா். இதன் மூலம், அந்தத் தொகுதியில் 3.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றாா்.
இதேபோல வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 6,47,445 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், அக்கட்சிப் பொதுச் செயலா் டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா 2,83,023 வாக்குகளை மட்டுமே பெற்றாா். இதன் மூலம், வயநாட்டிலும் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றியடைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறு, சிறு நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் விதிகள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி மீது கூட்டணிக் கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை: பாஜக

மத்திய அரசின் பிரிவினைவாதம் - ராகுல் குற்றச்சாட்டு
‘மாணவா்களின் குரல்’ போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்: கட்சியினருக்கு ராகுல் கடிதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




