உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காங்கிரஸ் வெற்றி பெறாத மாநிலங்கள்!

காங்கிரஸ் நேரடியாக போட்டியிட்ட 8 மாநிலங்களில் உள்ள 65 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றியை பதிவுசெய்யவில்லை.

Published On :

காங்கிரஸ் கட்சி நேரடியாக ’கை’ சின்னத்தில் போட்டியிட்ட ஆந்திரம் (23), அருணாச்சலப் பிரதேசம் (2), ஹிமாச்சலப் பிரதேசம் (4), மத்தியப் பிரதேசம் (29), உத்தரகண்ட் (5) , திரிபுரா (2), சிக்கிம் (1), மிஸோரம் (1) ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 67 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றியை பதிவுசெய்யவில்லை.

ஆந்திரத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 16-ல் தெலுங்கு தேசமும், பாஜக 4-லிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளிலும், உத்தரகண்ட்டில் 5 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றியை பதிவு செய்தது.

திரிபுராவில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மகாராணி கிருதி சிங் டெபர்மா வெற்றி பெற்றார். திரிபுரா மேற்கு தொகுதியில் பிப்லப் குமார் தேப் வெற்றி பெற்றார்.

மிஸோரமில் உள்ள ஒரே தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் ரிச்சர்ட் வன்லால்மங்காஹியா 68,288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சிக்கிமில் உள்ள ஒரே தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் இந்திரா ஹாங் சுப்பா வெற்றிபெற்றார்.

மொத்தமுள்ள 534 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றிபெற்று 2 ஆவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.