பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ஒரு கொலை தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகா சுவாமி. ஒரு மருந்தக நிறுவனத்தில் பணிபுரியும் சுவாமி, தர்ஷன் தூகுதீபாவுக்கு நெருக்கமான ஒரு நடிகைக்கு, சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை அனுப்பியிருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரேணுகா சுவாமி ஜூன் 8ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவில் அமைந்துள்ள காமாக்ஷிபால்யாவில் உள்ள ஒரு வடிகாலில் இருந்து, தெரு நாய்கள் ரேணுகா சுவாமியின் உடலை இழுத்துச் செல்வதைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில், தர்ஷன் இன்று காலை மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து பெங்களூருவுக்கு விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நடிகர் தர்ஷன் தூகுதீபா அனத்தாரு, கிராந்திவீர சங்கோலி ராயண்ணா மற்றும் காட்டேரா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கருப்பு படத்தின் அடுத்த பாடலைப் பாடும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

வாஜிா்பூரில் கும்பல் தாக்கி ஒருவா் கொலை: 4 போ் கைது

ரஜினியின் தன் வரலாறு நூலை எழுதும் பிரபல இயக்குநர்?

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

