ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

லாலு பிரசாத் யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

லாலு பிரசாத் யாதவ் தனது 77வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

படம் | ஏஎன்ஐ

Published On :11 ஜூன் 2024, 11:32 am IST

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இன்று(ஜூன் 11) தனது 77வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு, காலத்தை வென்ற கொள்கைகளை அமல்படுத்துதல், மத நல்லிணக்கத்தை முன்னிறுத்துதல் ஆகியவற்றுக்கான உங்களுடைய முயற்சி அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய சமுதாயத்தை வடிவமைக்க முக்கிய பங்காற்றியுள்ளது.

உங்கள் வாழ்நாள் சேவை, எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகமளித்துக் கொண்டேயிருக்கும் எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

தனது பிறந்தநாளையொட்டி லாலு பிரசாத் யாதவ் தனது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்த காணொலியை ராஷ்டிரிய ஜனதா தளம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Story image

ராஷ்டிரிய ஜனதா தள(ஆர்ஜேடி) கட்சியின் மூத்த தலைவரான லலு பிரசாத் யாதவ் மத்தியில் கடந்த 2004 - 2009 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.