அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்!
வட இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
வட இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மெல்ல மத்திய மற்றும் வட இந்தியாவை நோக்கி நகரவுள்ளதாகவும், ஒடிஸா, மேற்கு வங்கத்தின் வடமேற்கு பகுதி வரை சென்று மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் வெப்ப அலை நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தில் வெப்ப அலை கூடுதலாக இருக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட், தெற்கு உத்தரப் பிரதேசம், ஹரியாணா, சண்டீகர், தில்லி, பஞ்சாப், வடக்கு ராஜஸ்தானில் வெப்ப நிலை 45 - 47 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...