குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

ஹிமாசலத்தில் புதிதாக 6 எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஹிமாசலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

News image
Updated On :12 ஜூன் 2024, 1:45 pm IST

சிம்லா: ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னாள் அமைச்சரும், தர்மசாலாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவுமான சுதிர் சர்மா முதலில் பதவியேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ அனுராதா ராணா பதவியேற்றார்.

சுஜான்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏ கேப்டன் ரஞ்சித் சிங், பார்சார் தொகுதியின் பாஜக எம்எல்ஏ இந்தர் தத் லக்கன்பால், காக்ரெட்டின் காங்கிரஸ் எம்எல்ஏ ராகேஷ் கலியா மற்றும் குட்லேஹரின் காங்கிரஸ் எம்எல்ஏ விவேக் சர்மா ஆகியோர் பதவியேற்றனர்.

புதிய எம்எம்ஏக்களுக்கு அவைத்தலைவர் குல்தீப் சிங் பதானியா வாழ்த்து தெரிவித்தார். மாநிலம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

6 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நான்கில் காங்கிரஸும், இரண்டு இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றனர். கடந்த ஜூன் 1-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

ஆறு புதிய எம்எல்ஏக்களில் மூன்று பேர் சிங் (சுஜன்பூர்), ஷர்மா (குட்லேஹர்) மற்றும் ராணா (லாஹவுல் மற்றும் ஸ்பிதி) ஆகியோர் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.