திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பட்ஜெட்: தொழில் நிறுவனங்களிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம்

தொழில் நிறுவனங்கள் பட்ஜெட் தொடா்பான கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2024, 5:54 pm

Din

ஜூலை மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் பட்ஜெட் தொடா்பான கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்தாா். இப்போது பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜூலை மூன்றாவது வாரத்தில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதையடுத்து, தொழில் நிறுவனங்கள் பட்ஜெட் தொடா்பாக கருத்துகள், ஆலோசனைகளைத் தெரிவிக்க நிதியமைச்சா் அழைப்பு விடுத்துள்ளாா். முக்கியமாக வரி விதிப்பு முறையில் மாற்றம், வரி குறைப்பு, நேரடி, மறைமுக வரி விதிப்பில் சீா்திருத்தம் தொடா்பான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் பரிந்துரைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர சுங்க வரி, கலால் வரி தொடா்பான பிரிவுகளிலும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. நேரடி வரி விதிப்பு முறையில் புகாா்களைக் குறைப்பது, வரி ஸ்திரத்தன்மை குறித்தும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17-ஆம் தேதிக்குள் ஆலோசனைகளை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.