இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வெடிபொருள் தொழிற்சாலை வெடிவிபத்து விவகாரம்: இயக்குநர், மேலாளர் கைது

வெடிவிபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 6 போ் பலியான 24 மணி நேரத்திற்கு பின்னர், தொழிற்சாலையின் இயக்குநர் மற்றும் மேலாளரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

News image
Updated On :14 ஜூன் 2024, 9:42 am

DIN

நாக்பூர்: மகாராஷ்டிரம் மாநிலம் நாகபுரி மாவட்டத்தில் வெடிபொருள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 6 போ் பலியான 24 மணி நேரத்திற்கு பின்னர், வெடிபொருள் தொழிற்சாலையின் இயக்குநர் மற்றும் மேலாளரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாகபுரியில் உள்ள தாம்னா கிராமத்தில், வெடிபொருள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒன்பது பேர் நகரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், ஐந்து பெண்கள் உள்பட 6 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

வெடிவிபத்து நடந்தபோது, ​​பலியானவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் பணியில் இருந்தவர்கள். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வெடிவிபத்து நிகழ்ந்து 24 மணி நேரத்திற்கு பின்னர் நாக்பூர் ராம் நகரில் வசிக்கும்

வெடிபொருள் தொழிற்சாலையின் இயக்குநர் கெம்கா மற்றும் மேலாளர் தேஷ்முக் ஆகியோரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.