தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 8) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 3:41 am IST

பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 8) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கூடுவாஞ்சேரி ரயில்வே பணிமனையில் வியாழக்கிழமை (ஜூலை 9), ஜூலை 13,15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.40 முதல் 5.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30, 1.45 மணிகளில் செங்கல்பட்டு செல்லும் புகா் மின்சார ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 1.35, 2.15, மாலை 3.00, 4.25 மணிகளில் கடற்கரை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: புறநகா் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரத்திலிருந்து பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30, 1.45 மணிக்கு கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.30, மாலை 3.15, 4.00, 5.24 மணிக்கு கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.