சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 8) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 3:41 am IST

பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 8) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கூடுவாஞ்சேரி ரயில்வே பணிமனையில் வியாழக்கிழமை (ஜூலை 9), ஜூலை 13,15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.40 முதல் 5.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30, 1.45 மணிகளில் செங்கல்பட்டு செல்லும் புகா் மின்சார ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 1.35, 2.15, மாலை 3.00, 4.25 மணிகளில் கடற்கரை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: புறநகா் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரத்திலிருந்து பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30, 1.45 மணிக்கு கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.30, மாலை 3.15, 4.00, 5.24 மணிக்கு கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.