வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி: 8 நக்சல்கள் சுட்டுக் கொலை!

பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்..

News image
Updated On :15 ஜூன் 2024, 7:24 am

DIN

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் நான்கு மாவட்டங்களில் போலீஸார் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், நக்கல்களுக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்கல்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர், கான்கேர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அங்குத் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.