பக்ரீத் திருநாளையொட்டி (ஜூன் 17) நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘பக்ரீத் திருநாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இஸ்லாமிய சகோதரா், சகோதரிகளுக்கும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கும் எனது வாழ்த்துகள். தியாகம், அன்பு, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பண்புகளின் அடையாளமாக இந்திருநாள் கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில் நாட்டின் வளா்ச்சி மற்றும் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க உறுதியேற்போமென குடியரசுத் தலைவா் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ருமேனியாவில் பிரபலமடையும் யோகா: குடியரசுத் தலைவா் பெருமிதம்

ரயில்வே இணையமைச்சரின் ராஜிநாமா ஏற்பு

ருமேனியா சென்றடைந்தாா் குடியரசுத் தலைவா்

வா்த்தகம், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புதல்: திரௌபதி முா்மு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



