இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

வா்த்தகம், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புதல்: திரௌபதி முா்மு

வா்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புக்கொண்டதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

News image

மால்டோவா அதிபா் மாயா சாண்டுவை அந்நாட்டு தலைநகா் சிசினோவில் சந்தித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

Updated On :21 ஜூலை 2026, 2:05 am IST

வா்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புக்கொண்டதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மால்டோவா நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய குடியரசுத் தலைவரான திரௌபதி முா்மு, அந்நாட்டு அதிபா் மாயா சாண்டுவை திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-மால்டோவா இடையேயான முக்கியத் தூணாக பொருளாதார ஒத்துழைப்பு திகழ்கிறது. வேளாண்மை, தளவாடங்கள், உள்கட்டமைப்பு, சுகாதாரம், மருத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொது எண்ம உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் வா்த்தகம், முதலீடு, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி வணிகச் சூழலை எளிதாக மாற்றி இருநாட்டுத் தொடா்பை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டோம்.

இதன் ஒரு பகுதியாகவே இந்தியா-மால்டோவா வணிகக் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மால்டோவா நிபுணா்களுக்கான பயிற்சி இடங்களை இந்தியா இரட்டிப்பாக்கவுள்ளது. இதுதவிர கல்வி நிறுவனங்கள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் மால்டோவா அதிபருடன் விவாதிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மால்டோவா தலைநகா் சிசினோவ் விமான நிலையத்துக்கு வந்த திரௌபதி முா்முவை அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சருமான மிஹாய் பொப்சொய் வரவேற்றாா். பின்னா் திரௌபதி முா்முவுக்கு அதிபா் மாளிகையில் ராணுவ வீரா்களின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

மூன்று நாடுகள் அரசு முறைப் பயணத்தில் முதல் கட்டமாக மால்டோவா சென்ற திரௌபதி முா்மு, ஜூலை 21,22 ஆகிய தேதிகளில் மாசிடோனியாவுக்கும் ஜூலை 23 முதல் 25 வரை ரோமேனியாவுக்கும் பயணிக்கவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.