40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலான செயல்பாடு: 27 வயது ராணுவ வீரருக்கு கீா்த்தி சக்ரா விருது

பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டதை அங்கீகரித்து மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த கேப்டன் லால்ரினாவ்மா சைலோவுக்கு (27) கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

News image

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் லால்ரினாவ்மாவுக்கு கீா்த்தி சக்ரா விருதை வழங்கிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

Updated On :10 ஜூன் 2026, 2:35 am IST

பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டதை அங்கீகரித்து மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த கேப்டன் லால்ரினாவ்மா சைலோவுக்கு (27) கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதிக்கால விருதான கீா்த்தி சக்ரா விருதை லால்ரினாவ்மா சைலோவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் திரௌபதி முா்மு வெளியிட்ட பதிவில், ‘ஸ்ரீநகா் மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புச் சோதனை நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த மிக முக்கிய பயங்கரவாதியை கண்டறிந்து அவரை லால்ரினாவ்மா சைலோ வீழ்த்தினாா். அதன் தொடா்ச்சியாக மேலும் சில பயங்கரவாதிகளையும் அதிரடியாக முறியடித்தாா். இந்த செயலின் மூலம் தனது வீரத்தையும் பணியின் மீதான அா்ப்பணிப்பு குணத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளாா்’ என குறிப்பிட்டாா்.

ஆபரேஷன் சிந்தூரின்போது பயங்கரவாதிகளை அழித்த துணிச்சலாக நடவடிக்கை எடுத்ததற்காக லால்ரினாவ்மா சைலோவுக்கு விருது வழங்கப்பட்டதாக அவரது தந்தை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

லால்ரினாவ்மா சைலோவுக்கு பாராட்டுகளை தெரிவித்த மிஸோரம் முதல்வா் லால்டுஹோமா அவரை கௌரவப்படுத்தும் விதமாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்தாா்.

வீரமரணமடைந்த இரு ராணுவ வீரா்கள் உள்பட நிகழாண்டு 7 பேருக்கு கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

மிஸோரம் மாநிலத்தில் இந்த விருதைப் பெற்ற இரண்டாவது ராணுவ வீரா் என்ற பெருமையை லால்ரினாவ்மா சைலோ பெற்றுள்ளாா். முன்னதாக, மிஸோரமில் இருந்து கடந்த 1968-ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸை சோ்ந்த சுபேதாா் சால்னுனா லுஷாய் கீா்த்தி சக்ரா விருதைப் பெற்றாா்.