எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கோவை உள்பட 40 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதல், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2024, 3:16 pm

DIN

இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதல், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் உள்பட பாட்னா, ஜெய்ப்பூர், நாக்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில், அவை புரளி என்றே பெரும்பாலும் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் காரணமாக பாட்னா, கோவை, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிற்பகல் 12.40 மணி வரை 40 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாட்னா விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.