தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிகாரில் இடஒதுக்கீட்டை உயர்த்திய திருத்தச் சட்டம் ரத்து!

இடஒதுக்கீடு உயர்த்தியதை எதிர்த்த வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

News image
Updated On :20 ஜூன் 2024, 8:11 am

பிகாரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக அதிகரித்த திருத்த சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு கடந்தாண்டு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 65 சதவிகிதமாக இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு அளித்திருந்த நிலையில், நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் ஹரீஷ் குமார் அமர்வு விசாரணை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கினர்.

அந்த தீர்ப்பில், அரசியல் சாசனம் வழங்கிய சம உரிமையை இந்த திருத்தச் சட்டம் பின்பற்றவில்லை என்பதால், 65 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் திருத்தத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் கடந்தாண்டு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திருந்த முதல்வர் நிதீஷ் குமார், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டதுடன், இடஒதுக்கீட்டையும் 65 சதவிகிதமாக அதிகரித்து சட்டப்பேரவையில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 43%, எஸ்சி பிரிவினருக்கு 20%, எஸ்டி பிரிவினருக்கு 2% என மொத்தம் 65 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

தற்போது, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகு பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் முதல்வராகியுள்ள சூழலில், இடஒதுக்கீடு திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நிதீஷ் குமார் மேல்முறையிட்டு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.