
அசாமில் பெய்த கனமழைக்கு பல மாவட்டங்களில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோபிலி, பாராக், குஷியாரா உள்ளிட்ட பல முக்கிய ஆறுகள் வியாழக்கிழமை மாலை வரை அபாய அளவைத் தாண்டி ஒடிக்கொண்டிருந்தன.
19 மாவட்டங்களில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஜாலி, பக்சா, பர்பேட்டா, பிஸ்வநாத், கச்சார், தர்ராங், கோல்பாரா, ஹைலகண்டி, ஹோஜாய், கம்ரூப், கரீம்கஞ்ச், கோக்ரஜார், லக்கிம்பூர், நாகோன், நல்பாரி, சோனித்பூர், தெற்கு சல்மாரா, தாமுல்பூர் மற்றும் உடல்குரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அசாமின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும், மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.
100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 14,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீரால் பல தடுப்பணைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.