மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் மீது மை வீச்சு

முகமூடி அணிந்த நபர்கள் காங்கிரஸ் தலைவரின் மீதான மை வீச்சு

News image
Updated On :21 ஜூன் 2024, 10:17 pm IST

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக் மீது முகமூடி அணிந்த இரு நபர்கள் மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக். இன்று காலை 11.30 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் பட்நாயக்கின் அறைக்குள் நுழைந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் அவரது ஆடையில் நீல மையை தெளித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர். இதனால் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

இதுகுறித்து பட்நாயக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற சம்பவங்களால் நான் பயப்படவில்லை.

மாநிலத்தில் காங்கிரஸின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் இதன் பின்னணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

பின்னர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்றார். பாஜக செய்தித் தொடர்பாளர் திலீப் மல்லிக் கூறுகையில், இந்தச் சம்பவம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலின் விளைவாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.