தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தடயங்களை அழிக்க ரூ.40 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்தேன்: நடிகர் தர்ஷன் வாக்குமூலம்

கொலை சம்பவத்தில் தடயங்களை அழிக்க ரூ.40 லட்சம் கொடுத்ததாக நடிகர் தர்ஷன் ஒப்புதல்

News image

நடிகர் தர்ஷன்

Updated On :22 ஜூன் 2024, 1:11 pm IST

பெங்களூரு: ஒரு தீவிர ரசிகனின் கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், தடயங்களை அழிக்க ரூ.40 லட்சம் கடன்வாங்கிக் கொலையாளிகளுக்குக் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில்லாமல், ரேணுகாசாமி கொலை வழக்கில், காவல்நிலையத்தில் சரணடைந்தவர்களுக்கு ரூ.30 லட்சத்தை தர்ஷன் கொடுத்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நண்பர் ஒருவரிடம், தர்ஷன் ரூ.40 லட்சம் கடன் பெற்று, அதனை ரேணுகாசாமி கொலைக்கான தடயங்களை அழிக்க குற்றவாளிகளுக்குக் கொடுத்திருப்பதும், கொலை செய்தவர்களுக்கு ஒரு பெரிய தொகையும், காவல்நிலையத்தில் தாங்கள்தான் கொலை செய்ததாக மூன்று பேர் சரணடைய அவர்களுக்கு ரூ.15 லட்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில், நடிகை பவித்ரா குறித்து மோசமான கருத்துகளை பதிவிட்டுவந்ததால், ரேணுகாசாமியை கடத்திக் கொலை செய்ய கன்னட நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா திட்டமிட்டு இந்தக் கொலையை நடத்தியிருக்கிறார்கள். இதில் தொடர்புடைய 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 8ஆம் தேதி ரேணுகாசாமி என்ற ரசிகர் பெங்களூருவில் கொல்லப்படுகிறார். ஒரு தனிநபர் கொலையின் பின்னணியில், காவல்துறை விசாரணையைத் தொடங்கும் முன்பே, நால்வர் சரணடைகிறார்கள். சினிமா பாணியில் மிகவும் சவாலான இந்த கொலை வழக்கில், மிக சாமர்த்தியமாக துப்பு துலக்கிய காவல்துறையினர், யாருமே எதிர்பாராத வகையில், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 13 பேரை கைது செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் காவல்துறை துணை ஆணையர் கிரிஷ்தான் மிகவும் சாமர்த்தியமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததாக தகவல்கள் வெளியாகின. இவருடன் விஜயநகரம் - காவல்துறை உதவி ஆணையர் சாந்தன் குமாரும் இணைந்து சின்னத் சின்ன சந்தேகங்களை வைத்து இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கைது செய்திருக்கிறார்கள்.

தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசாமி கொலை வழக்கில், நான்கு பேர் சரணடைகிறார்கள். இதில்தான் காவல் ஆணையர் கிரிஷ் சந்தேகம் கொள்கிறார். காரணம், இதுபோன்று சரணடையும் விவகாரங்கள் ரௌடிகளின் கொலையின்போதுதான் நடக்கும். ஆனால், ரேணுகாசாமியோ ரௌடி அல்ல. ஒரு தனிநபர்.

எனவே, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சரணடைந்தவர்களுக்கும் ரேணுகாசாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இந்த கொலையில் மிகப்பெரிய நபர்களுக்குத் தொடர்பிருப்பதை காவல்துறையினர் கண்டறிகிறார்கள்.

சரணடைந்தவர்களுக்கு பணம் கொடுப்பதாக பேரம் பேசியவர்களை தேடுகிறது காவல்துறை. விசாரணையில்தான் நடிகர் தர்ஷனின் நெருங்கிய உதவியாளர் வினய் என்பவரை காவல்துறை சுற்றிவளைக்கிறது. பிறகு காவல்துறை பாணியில் விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

கன்னட திரையுலகில் கரியா, கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா, கலாசிபாளையா, கஜா, நவகிரஹா, புல்புல், யஜமானா, ராபா்ட், காலாரே உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவா் நடிகா் தா்ஷன். இவா், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமி (33) என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்படுகிறார்.

நடிகா் தா்ஷன் (46) ஏற்கெனவே விஜயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில், அவா், நடிகை பவித்ரா கௌடா (35) என்பவருடன் நெருக்கமாகப் பழகி வந்ததுகுறித்து அறிந்துகொண்ட நடிகா் தா்ஷனின் ரசிகா் ரேணுகாசாமி, பவித்ரா கௌடா குறித்து மோசமான கருத்துகளை பதிவுகளை செய்து வந்துள்ளார். இதனால் பவித்ரா, ரேணுகாசாமியை கொலை செய்ய வேண்டும் என்று தர்ஷனை தூண்டியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.