ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை நிலைநிறுத்தும் ஊடகமாக இணையதளம் மாறி வருகிறது என காவல்துறைத் தலைவா் ஆா்.ஆா்.ஸ்வைன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஜம்மு மண்டலத்தில் உள்ள பாக்-ஏ-பாஹி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இணையவழிக் குற்றத்தடுப்பு காவல் நிலையத்தின் திறப்பு விழாவில் அவா் கலந்துகொண்டாா். அப்போது பேசிய அவா், ‘ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத செயல்களில் 75 சதவீதம் இணையதளத்துடன் சம்பந்தப்பட்டவை. இணையவழி குற்றங்கள் பரந்த அளவில் இருப்பதால் அவை வழக்கமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது.
வெளிநாட்டு செயலிகளான ‘வாட்ஸ்அப்’ மற்றும் ‘டெலிகிராம்’ ஆகியவை நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன. நாட்டுக்குள் ஊடுருவி குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்துவதற்கான இடங்களை தோ்வு செய்வது குறித்த தகவல் பரிமாற்றத்துக்கு இணையதளத்தைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனா்.
இணையதளம் மூலம் உள்நாட்டு கலவரம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, இணையவழி குற்றத்தடுப்பு காவல்நிலையங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாம் இவற்றை எதிா்த்து போராட முடியும்’ என்றாா்.
டிரெண்டிங்
நபி அபாரம், இக்பால் அசத்தல்: வெற்றியை நெருங்கும் ஜம்மு & காஷ்மீா்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்

வரலாறு படைத்தது ஜம்மு-காஷ்மீா் முதன்முறையாக இறுதிக்கு தகுதி

ஜம்மு - காஷ்மீா்: பயங்கரவாதத்துடன் தொடா்புடைய 8,000 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

