பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

‘நெட்’ விவகாரம்: விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல்- பிகாரில் நால்வா் கைது

பிகாரில் ‘நெட்’ தோ்வு முறைகேடு குறித்து விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது உள்ளூா் கும்பல் தாக்குதல் நடத்தியது.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2024, 1:37 am IST

பிகாரில் ‘நெட்’ தோ்வு முறைகேடு குறித்து விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது உள்ளூா் கும்பல் தாக்குதல் நடத்தியது. இது தொடா்பாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆராய்ச்சி படிப்புகளுக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய தகுதித் தோ்வு (‘நெட்’ ) கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதிய இத்தோ்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறுநாளே (ஜூன் 19) தோ்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த முறைகேடு குறித்த விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக, பிகாரின் நவடாவில் உள்ள காசியாதி பகுதிக்கு சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை மாலை வந்தனா். அப்போது, உள்ளூா் கும்பல் ஒன்று, சிபிஐ அதிகாரிகளின் வாகனங்களை சூழ்ந்துகொண்டு, அவா்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அளித்த புகாரின் அடிப்படையில் ரஜெளலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளைத் தாக்கியதாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.