உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

‘நெட்’ விவகாரம்: விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல்- பிகாரில் நால்வா் கைது

பிகாரில் ‘நெட்’ தோ்வு முறைகேடு குறித்து விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது உள்ளூா் கும்பல் தாக்குதல் நடத்தியது.

கோப்புப் படம்

Published On :24 ஜூன் 2024, 1:36 am IST

பிகாரில் ‘நெட்’ தோ்வு முறைகேடு குறித்து விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது உள்ளூா் கும்பல் தாக்குதல் நடத்தியது. இது தொடா்பாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆராய்ச்சி படிப்புகளுக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய தகுதித் தோ்வு (‘நெட்’ ) கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதிய இத்தோ்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறுநாளே (ஜூன் 19) தோ்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த முறைகேடு குறித்த விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக, பிகாரின் நவடாவில் உள்ள காசியாதி பகுதிக்கு சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை மாலை வந்தனா். அப்போது, உள்ளூா் கும்பல் ஒன்று, சிபிஐ அதிகாரிகளின் வாகனங்களை சூழ்ந்துகொண்டு, அவா்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அளித்த புகாரின் அடிப்படையில் ரஜெளலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளைத் தாக்கியதாக 4 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.