மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா: லாரி மீது மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 4 பேர் காயம்

பாலசோர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் விபத்தில் 4 பேர் காயம்

News image

கோப்புப் படம்.

Updated On :23 ஜூன் 2024, 6:46 am

ஒடிசாவில் லாரி மீது மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

ஒடிசாவில் நோயாளி ஒருவருடன் பஸ்தாவில் இருந்து பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

அப்போது முர்கிமுண்டி சாக் அருகே ஆம்புலன்ஸ் கண்டெய்னர் லாரியின் பின்னால் ஆம்புலன்ஸ் திடீரென மோதியது.

இந்த சம்பவத்தில் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.

நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர், நோயாளி மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸின் மருந்தாளர் மேல் சிகிச்சைக்காக எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.