இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"அரசியலமைப்புச் சட்டம் நம் நாட்டில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாகும். கடந்த 10 ஆண்டுகளில், பாஜக அரசு இந்த பாதுகாப்பு கவசத்தை பல வழிகளில் சேதப்படுத்த முயன்றது மற்றும் மக்களின் உரிமைகளை தாக்கியது.
அரசியலமைப்பின் நகல் எங்கள் கைகளில், அதன் மதிப்புகள் இதயங்களில்! உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது - இந்தியக் கூட்டணி தனது முழு பலத்துடன் அதை பாதுகாக்கும்.
பிரதமரும், அமித் ஷாவும் அரசியல் சாசனத்துக்கு என்ன செய்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது... அதை நடக்க விடமாட்டோம், அதனால்தான் பதவிப்பிரமாணம் செய்யும் போது அரசியலமைப்பு நகலை எடுத்துச் சென்றோம்.
இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் தொட முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் பெரும் ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம்: ரேபரேலியில் ராகுல்!

ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் பெரிய முன்னேற்றம்: ராகுல் காந்தி








