வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாநிலங்களவை முன்னவராக ஜெ.பி. நட்டா நியமனம்!

பியூஷ் கோயலுக்கு பதிலாக மாநிலங்களவை முன்னவராக அமைச்சர் ஜெ.பி. நட்டா நியமனம்.

News image

நாடாளுமன்ற வளாகத்தில் ஜெ.பி. நட்டா

Updated On :24 ஜூன் 2024, 7:18 pm IST

மாநிலங்களவை முன்னவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை முன்னவராக இருந்த பியூஷ் கோயல் தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவைமுன்னவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளையும் நடைபெறவுள்ளது.

இதனிடையே மாநிலங்களவை முன்னவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, கீழவை (மக்களவை) உறுப்பினராக பதவியேற்றதால், மாநிலங்களவை முன்னவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெ.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை மற்றும் பெட்ரோலியத் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களவை முன்னவராக ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சியை மாநிலங்களவையில் தலைமையேற்று நடத்தும் பதவி, போன்றவற்றை ஜெ.பி. நட்டாவே இனி கவனிக்கவுள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ள நட்டாவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.