திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

பேச்சுவார்த்தைக்குத் தயார்! எங்கள் அலுவலகத்துக்கோ இல்லத்துக்கோ சிஜேபியினர் வரலாம்: ஜெ.பி. நட்டா

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளது பற்றி...

News image

ஜெ.பி. நட்டா - ஏஎன்ஐ

Updated On :23 ஜூலை 2026, 5:21 pm IST

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராடி வருகின்றனர்.

போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர்.

இந்தப் போராட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்ட லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் தனது உண்ணாவிரதத்தைத் தற்போதுவரை தொடர்ந்து வருகிறார்.

இந்தப் போராட்டமானது நாட்டின் பல்வேறு பகுதியில் பரவியுள்ள நிலையில், மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவளித்து தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாகவும் எங்கள் அலுவலகத்துக்கோ அல்லது இல்லத்துக்கோ சிஜேபியினர் வரலாம் எனவும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

போராட்டம் தீவிரமடைந்து வருவதால் தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடைகள், அலுவலகங்களை மூட தில்லி வர்த்தக சங்கம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Union Minister J.P. Nadda has stated that they are ready for talks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.