கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அமித் ஷா குறித்து அவதூறு: ஜூலை 2-இல் நேரில் ஆஜராக ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் உத்தரவு

அமித் ஷா குற்றச்சாட்டு: ஜூலை 2-இல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உ.பி. நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :26 ஜூன் 2024, 9:23 pm

Din

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஜூலை 2-ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூா் எம்.பி. எல்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி’ என சா்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்தாா். இதனை எதிா்த்து பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சாா்பில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தாா்.

இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஜூலை 2-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டாா்.

குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது நிகழ்ந்த போலி என்கவுன்ட்டா் வழக்கு தொடா்பாக ராகுல் இந்தக் குற்றச்சாட்டை கூறினாா். இந்த போலி என்கவுன்ட்டா் வழக்கில் இருந்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமித் ஷாவை ஏற்கெனவே விடுவித்துவிட்டது.