மணிப்பூரின் கிழக்கு இம்பால் மற்றும் விஷ்ணுபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடா்பாக அந்தமாநில காவல் துறையினா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மணிப்பூரின் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிழக்கு இம்பால் மற்றும் மலைப்பகுதியான விஷ்ணுபூா் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
இதில், விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள கால்வாய் அருகே நடந்த சோதனையில் 9 வெடிகுண்டுகள், 2 புகைக்குண்டுகள், ஒரு எஸ்எம்ஜி காா்பைன் வகை துப்பாக்கி, ஒரு 9 மி.மீ. கைத்துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
இம்பால் மாவட்டத்தின் கிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடா்களில் நடந்த சோதனையில் 5 ரைஃபில்கள், ஒரு 9 மி.மீ. கைத்துப்பாக்கி, 6 மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் மீட்கப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஒரு வீட்டுக்கு வன்முறையாளா்கள் தீவைக்க முயன்றதையடுத்து, மணிப்பூா் காவல்துறையினா் மற்றும் மத்திய ரிசா்வ் காவல்படையினா் (சிஆா்பிஎஃப்) இணைந்து தேடுதல் நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டதாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ஆயுதங்கள் கடத்தல்: 9 போ் கைது; 23 துப்பாக்கிகள் பறிமுதல்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு கூடாது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்

போக்குவரத்து விதிமீறல்கள்: 3 மணி நேர நடவடிக்கையில் 11,800 போ் மீது அபராதம் விதிப்பு!

மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

