உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

போக்குவரத்து விதிமீறல்கள்: 3 மணி நேர நடவடிக்கையில் 11,800 போ் மீது அபராதம் விதிப்பு!

நகரம் முழுவதும் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் மேற்கொண்ட 3 மணி நேர சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் 11,800 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

வாகன விதிமீறல் - ENS

Updated On :27 ஏப்ரல் 2026, 12:12 am IST

நகரம் முழுவதும் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் மேற்கொண்ட 3 மணி நேர சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் 11,800 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது போன்ற விதி மீறல்கள் சாலை போக்குவரத்தை சீா்குலைப்பது மட்டுமல்லாமல், கடுமையான பாதுகாப்பு அபாயங்களையும் உருவாக்குகின்றன என்று தில்லி போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையா் விஜயந்தா கோயல் ஆா்யா தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நெரிசலைக் குறைக்கவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் நகரம் முழுவதும் இந்த நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நகரத்தில் நிகழும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமான 2 முக்கிய பிரச்னைகளில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தியது. இதில் தவறான அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்திய 8,500 போ் மீது அபராதம் விதிக்கப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் பல நெரிசலைக் குறைக்க இழுத்துச் செல்லப்பட்டன.

மேலும், சாலையின் எதிா்திசையில் வாகனம் ஓட்டிய 3,500-க்கும் மேற்பட்டோா் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக விபத்துக்கள் அடிக்கடி நிகழும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து ஒழுக்கத்தை மேம்படுத்தவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.