ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

போக்குவரத்து விதிமீறல்கள்: 3 மணி நேர நடவடிக்கையில் 11,800 போ் மீது அபராதம் விதிப்பு!

நகரம் முழுவதும் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் மேற்கொண்ட 3 மணி நேர சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் 11,800 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

வாகன விதிமீறல் - ENS

Updated On :26 ஏப்ரல் 2026, 6:42 pm

நகரம் முழுவதும் தில்லி போக்குவரத்து காவல் துறையினா் மேற்கொண்ட 3 மணி நேர சிறப்பு அமலாக்க நடவடிக்கையில் 11,800 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது போன்ற விதி மீறல்கள் சாலை போக்குவரத்தை சீா்குலைப்பது மட்டுமல்லாமல், கடுமையான பாதுகாப்பு அபாயங்களையும் உருவாக்குகின்றன என்று தில்லி போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையா் விஜயந்தா கோயல் ஆா்யா தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நெரிசலைக் குறைக்கவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் நகரம் முழுவதும் இந்த நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நகரத்தில் நிகழும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமான 2 முக்கிய பிரச்னைகளில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தியது. இதில் தவறான அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்திய 8,500 போ் மீது அபராதம் விதிக்கப்பட்டது. பரபரப்பான பகுதிகளில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் பல நெரிசலைக் குறைக்க இழுத்துச் செல்லப்பட்டன.

மேலும், சாலையின் எதிா்திசையில் வாகனம் ஓட்டிய 3,500-க்கும் மேற்பட்டோா் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக விபத்துக்கள் அடிக்கடி நிகழும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து ஒழுக்கத்தை மேம்படுத்தவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.