கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி!

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியாகினர்.
கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி!
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் மும்பை-நாக்பூர் விரைவுச்சாலையில் இரண்டு கார்கள் மோதியதில் 7 பேர் பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “காட்வாஞ்சி கிராமத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற காரும், எதிர்திசையில் இருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலியானவர்கள் மும்பை மற்றும் புல்தானா மாவட்டத்தில் உள்ள மலாட் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்தில் மோதிய கார், தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சாலையின் இடதுபுறத்தில் வந்து விழுந்தது.

காயமடைந்த மூவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com