நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த தருணம்: தோனி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

News image

படம் | பிடிஐ

Updated On :30 ஜூன் 2024, 11:43 am IST

முதன் முதலாக கடந்த 2007-ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.

உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டு இந்திய வீரர்களை மனமார வாழ்த்தியுள்ளார் தோனி.

தோனி கூறியிருப்பதாவது, ”2024 உலகக்கோப்பை சாம்பியன்கள்!” என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது. அமைதியாக இருந்து சாதித்துக் காட்டினீர்கள், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டீர்கள்.

உலகக்கோப்பையை தாயகம் கொண்டு வந்ததற்காக, தாயகத்திலிருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் அனைத்து இந்தியர்கள் சார்பாக உங்களுக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள்!

விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசளித்தமைக்காக நன்றி! எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் தோனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.