கடந்த பிப்ரவரியில் நாட்டில் ரூ.1.68 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,68,337 கோடியாகும். இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ஜிஎஸ்டி வருவாயுடன் ஒப்பிடுகையில் 12.5 சதவீதம் அதிகம். கடந்த பிப்ரவரியில் மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.31,785 கோடி, மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.39,615 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.84,098 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.38,593 கோடியும் அடங்கும்). செஸ் வரி வசூல் ரூ.12,839 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.984 கோடியும் அடங்கும்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.9,713 கோடி. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ரூ.8,774 கோடியுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம். இதேபோல பிப்ரவரியில் புதுச்சேரியின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.231 கோடி. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் வசூலான ரூ.188 கோடியுடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

