மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெங்களூரு குண்டு வெடிப்பு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய தில்லி போலீஸார்!

தில்லியின் சந்தைகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2024, 6:23 am

DIN

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தில்லி காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

பெங்களூரு உணவகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் குண்டுவெடிப்பு சம்பம் நிகழ்ந்தது. இதுதொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகள் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதச் செயல் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நெரிசலான பகுதிகளில், குறிப்பாக தில்லியின் சந்தைகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேசத்திற்கிடமான செயலை கண்டறிந்தால், உடனே உள்ளூர் காவல் நிலையங்களை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சந்தை சங்கங்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்ய சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தில்லி காவல்துறை வெடிகுண்டு செயலிழக்கும் குழுக்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்களை விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

பெங்களூரு புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் சனிக்கிழமையன்று குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.