பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று வியாழக்கிழமை இரவு காவல் துறை தெரிவித்தது.
கைபர் பக்துன்க்வாவின் பன்னு மாவட்டத்தில் உள்ள டோமெல் வட்டத்தில் காவல் நிலையத்தின் பின்புறத்தில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் மூலம் இந்த தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது என்று காவல் துறை கூறியது.
பல மைல்கள் தொலைவு வரை கேட்கப்பட்ட இந்த வெடிப்பின் தீவிரம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.
வெடிவிபத்தில் காயமடைந்த 13 பேரில் நான்கு காவல் துறைப் பணியாளர்களும் அடங்குவர். அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதால், அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Summary
A suicide car bomb blast targeting a police station in northwest Pakistan killed five persons, including four from the same family, and wounded 13 others late Thursday, police said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்! 2 குழந்தைகள் பலி!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


