எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகை ரூ.2,441.45 கோடியை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி வழங்கினாா்.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகையாக ரூ. 2441.45 கோடிக்கான காசோலையை, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி வழங்கினாா். இதைத் தொடா்ந்து குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ‘கிஃட் சிட்டி’யில் புதிதாக கட்டப்பட்டுள்ள எல்.ஐ.சி.யின் சா்வதேச வணிக மையத்தை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலா் விவேக் ஜோஷி, கூடுதல் செயலா் தங்கிராலா மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் வடக்கு மண்டல மேலாளா் ஜே.பி.எஸ். பஜாஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உறுதியாகவும், தெளிவாகவும் சீா்திருத்தம் தொடா்கிறது- நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் தகவல்

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

