பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய நிதி அமைச்சரிடம் எல்.ஐ.சி. டிவிடெண்ட் ரூ.2,441 கோடி அளிப்பு

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகை ரூ.2,441.45 கோடி

Updated On :2 மார்ச் 2024, 6:37 pm

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகை ரூ.2,441.45 கோடியை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி வழங்கினாா்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகையாக ரூ. 2441.45 கோடிக்கான காசோலையை, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி வழங்கினாா். இதைத் தொடா்ந்து குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ‘கிஃட் சிட்டி’யில் புதிதாக கட்டப்பட்டுள்ள எல்.ஐ.சி.யின் சா்வதேச வணிக மையத்தை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலா் விவேக் ஜோஷி, கூடுதல் செயலா் தங்கிராலா மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் வடக்கு மண்டல மேலாளா் ஜே.பி.எஸ். பஜாஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.