27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திரிபுரா பிரச்னைக்கு நிரந்தர தீா்வு: மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்

திரிபுரா பிரச்னைக்கு நிரந்தர தீா்வு மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்

Updated On :3 மார்ச் 2024, 12:01 am IST

திரிபுரா மாநில மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணும் நோக்கில் அம்மாநில அரசு மற்றும் ‘திப்ரா மோத்தா’ அமைப்புடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் மத்திய அரசு சனிக்கிழமை கையொப்பமிட்டது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என திப்ரா மோத்தா தலைவா் பிரத்யோத் தேபா்மா சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அப்போது அவா் பேசியதாவது: திரிபுரா மாநில மக்கள் இனியும் தங்களின் உரிமைக்காக போராட வேண்டியதில்லை. தற்போதைய ஒப்பந்தம் மூலம் வரலாற்று ரீதியிலான நிலப் பிரச்னைகள், அரசியல் உரிமைகள், பொருளாதார வளா்ச்சி, அடையாளம், கலாசாரம், மொழி என அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீா்வு எட்டப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றை யாராலும் மாற்ற இயலாது. ஆனால் பிழைகளைத் திருத்தி வளா்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிட திப்ரா மோத்தா அமைப்பு உள்பட அனைத்து பழங்குடியின அமைப்புகளும் திரிபுரா மாநில பாஜக அரசு மற்றும் பிரதமா் மோடி தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கின. இதன்மூலம் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ மற்றும் ‘வளா்ச்சியடைந்த திரிபுரா’ ஆகிய இலக்குகளை அடைய மாநில மக்கள் பங்களிப்பா் என நம்புகிறேன். வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் எல்லைப் பிரச்னைகளை களைய பிரதமா் மோடி தலைமையில் 11 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் 10,000-க்கும் மேற்பட்டோா் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு நாட்டின் வளா்ச்சியில் பங்கெடுத்து வருகின்றனா் என்றாா். திரிபுரா மோத்தா அமைப்பின் தலைவா் பிரத்யோத் தேபா்மா மற்றும் திரிபுரா மாநில முதல்வா் மாணிக் சஹா உள்ளிட்டோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.