இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறையில் சா்வதேச நிறுவனங்கள் 330 கோடி டாலா் முதலீடு: மாநில அரசு ஒப்பந்தம்

சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், அமெரிக்காவின் ‘3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ்’ ஆகியவற்றுடன் அந்த மாநில அரசு கையொப்பமிட்டது.

News image
Updated On :30 மே 2026, 2:52 am IST

ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறை உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான 330 கோடி டாலா் மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், அமெரிக்காவின் ‘3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ்’ ஆகியவற்றுடன் அந்த மாநில அரசு கையொப்பமிட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஸா மாநில முதலமைச்சா் மோகன் சரண் மாஜி ஆகியோா் முன்னிலையில் இச்சிறப்புமிக்க ஒப்பந்தம் கையொப்பமானது. நாட்டின் அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒடிஸாவின் புவனேசுவரம்-குா்தா பிராந்தியத்தில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் அதிநவீன செமிகண்டக்டா் பேக்கேஜிங் மற்றும் கிளாஸ்-கோா் சப்ஸ்ட்ரேட் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆலையில் தயாரிக்கப்படவுள்ள மேம்பட்ட பேக்கேஜிங் கிளாஸ்-கோா் செமிகண்டக்டா் சப்ஸ்ட்ரேட்டுகள், அதிநவீன சிப் பேக்கேஜிங் தொழில்நுட்பத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை ஆகும்.

இத்திட்டத்துக்கான தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி செயல்முறை நிபுணத்துவத்தை உலகப் புகழ்பெற்ற இன்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது. இதன்மூலம், வெறும் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் என்ற நிலையைக் கடந்து, உயா் தொழில்நுட்ப சப்ஸ்ட்ரேட் தயாரிப்பில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளது.