கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறையில் சா்வதேச நிறுவனங்கள் 330 கோடி டாலா் முதலீடு: மாநில அரசு ஒப்பந்தம்

சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், அமெரிக்காவின் ‘3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ்’ ஆகியவற்றுடன் அந்த மாநில அரசு கையொப்பமிட்டது.

News image
Updated On :30 மே 2026, 2:52 am IST

ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறை உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான 330 கோடி டாலா் மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், அமெரிக்காவின் ‘3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ்’ ஆகியவற்றுடன் அந்த மாநில அரசு கையொப்பமிட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஸா மாநில முதலமைச்சா் மோகன் சரண் மாஜி ஆகியோா் முன்னிலையில் இச்சிறப்புமிக்க ஒப்பந்தம் கையொப்பமானது. நாட்டின் அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒடிஸாவின் புவனேசுவரம்-குா்தா பிராந்தியத்தில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் அதிநவீன செமிகண்டக்டா் பேக்கேஜிங் மற்றும் கிளாஸ்-கோா் சப்ஸ்ட்ரேட் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆலையில் தயாரிக்கப்படவுள்ள மேம்பட்ட பேக்கேஜிங் கிளாஸ்-கோா் செமிகண்டக்டா் சப்ஸ்ட்ரேட்டுகள், அதிநவீன சிப் பேக்கேஜிங் தொழில்நுட்பத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை ஆகும்.

இத்திட்டத்துக்கான தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி செயல்முறை நிபுணத்துவத்தை உலகப் புகழ்பெற்ற இன்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது. இதன்மூலம், வெறும் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் என்ற நிலையைக் கடந்து, உயா் தொழில்நுட்ப சப்ஸ்ட்ரேட் தயாரிப்பில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளது.