உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மர்மநபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மார்ச் 2 ஆம் தேதி, பாதுகாப்பு தலைமையகத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலர் ஒருவருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுவார் எனக் கூறி, அந்த நபர் அழைப்பைத் துண்டித்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக மர்மநபர் மீது மகாநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...